கொலை செய்யப்பட்ட பரூக் குடும்பத்திற்கு சத்யராஜ் செய்த மகத்தான உதவி

  • IndiaGlitz, [Sunday,April 02 2017]

சமீபத்தில் கோவை பகுதியில் பரூக் என்ற கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். திராவிட கழகத்தை சேர்ந்த பரூக், இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்து கூறியதால் ஆத்திரமடைந்து பரூக்கை கொலை செய்ததாக அன்சாத், சதாம் உசேன் உள்ளிட்ட 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இந்த சம்பவத்தால் பரூக் குடும்பத்தினர் துன்பக்கடலில் மூழ்கியிருக்கும் நிலையில் திராவிடர் கழகத்தின் அனுதாபியும், பெரியாரின் உண்மைத்தொண்டர்களில் ஒருவருமான சத்யராஜ், கொலை செய்யப்பட்ட பரூக் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்

சத்யராஜின் இந்த நிதியுதவி பரூக் குடும்பத்தினர்களுக்கு பேருதவியாக இருந்தது. அவர்கள் சத்யராஜூக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால் சத்யராஜூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

காதல் மன்னன் கேரக்டரை மிஸ் செய்த சூர்யா

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'மகாநதி' படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் கேரக்டரில் பிரபல நடிகர் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த கேரக்டரில் சூர்யா நடிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். வெற்றி பெறுவது யார்?

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன் தொடங்கியுள்ளது.

ஏப்ரல்-1: இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள்

ஏப்ரல்-1. இந்த தேதியை கேட்டால் அனைவருக்கும் முட்டாள்கள் தினம்தான் ஞாபகம் வரும். ஆனால் இந்த வருடம் ஏப்ரல் 1, மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது

தனுஷ் மற்றும் சவுந்தர்யாவுக்கு ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி

தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கடந்த சில மாதங்களாக 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது

தெலுங்கு படத்தில் வில்லனாகும் பிரபல தமிழ் ஹீரோ

பாலிவுட் நாயகர்கள் அக்சயகுமார், விவேக் ஓபராய் ஆகியோர்கள் தமிழ் படங்களில் வில்லனாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் ஹீரோ ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.