close
Choose your channels

சமூக போராளிகளின் கையினால் விருதினை பெற்ற சத்யராஜ்

Saturday, January 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு சமீபத்தில் விகடன் நிறுவனம் சிறந்த குணசித்திர விருதினை வழங்கியது. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் தனது சிறப்பான நடிப்பினால் முத்திரை பதித்த சத்யராஜூக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விருதினை தான் ஒரு சமூக போராளியிடம் இருந்து பெற விரும்புவதாக சத்யராஜ், விருது வழங்கும் குழுவினர்களிடம் கேட்டு கொண்டதாகவும், சத்யராஜின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள், அவருக்கு இந்த விருதினை கவுசல்யா சங்கர் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர்களை வரவழைத்து அளிக்க ஏற்பாடு செய்தது

ரசிகர்களை தங்களது சுயலாபத்திற்காகவும், அரசியல் கட்சிக்காகவும் பயன்படுத்தி வரும் நடிகர்கள் மத்தியில் பெற்றோர்களாக இருந்தாலும் தண்டனை வாங்கி தந்து சமூக நீதியை காக்க போராடிய கவுசல்யா சங்கர் மற்றும் தமிழர்களின் உரிமைகளுக்காம போராடும் திருமுருகன் காந்தி ஆகியோர்களிடம் விருதினை பெற விரும்புவதாக கூறிய சத்யராஜூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.