விஜய்-அட்லி படத்தில் சத்யராஜ் வில்லன்?

  • IndiaGlitz, [Saturday,July 04 2015]

ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக தனது திரையுலக வாழ்க்கையை தொடக்கிய சத்யராஜ், அதன்பின்னர் ஹீரோவாக புரமோஷன் ஆனார். அவர் ஹீரோவாக நடித்த கடலோர கவிதைகள், ஏர்போர்ட், ஜீவா, மக்கள் என் பக்கம் உள்பட பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால், அதன்பின்னர் வில்லன் வேடத்தையே மறந்துவிட்டார். ரஜினி நடித்த சிவாஜி' படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க ஷங்கரிடம் இருந்து வாய்ப்பு வந்தபோது அதை மறுத்தவர் சத்யராஜ் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் தற்போது உருவாகி வரும் விஜய்-அட்லி படத்தில் சத்யராஜுக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் வேடத்தில் விஜய் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் வரும் ஒரு ப்ளாஷ்பேக் காட்சிக்காக ஒரு பவர்புல் வில்லன் தேவைப்படுகிறது என்றும், அதற்காக அட்லி, சத்யராஜை அணுகியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லியின் 'ராஜா ராணி' படத்தில் சத்யராஜ், நயன்தாரா தந்தையாக நடித்திருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

'நண்பன்' படத்தில் விஜய்க்கு பேராசிரியராகவும், 'தலைவா' படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்திருந்த சத்யராஜ், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படத்தில் மெயின் வில்லனாக மகேந்திரன் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More News

அஜீத் வழியில் செல்லும் சிம்பு!

அஜீத்தின் வெறித்தனமான ரசிகர் சிம்பு என்பது கோலிவுட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். அஜீத் நடித்த படங்கள் ரிலீஸாகும் தினத்தில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு ரசிகராக சிம்புவும் சேர்ந்து பார்த்து ரசிப்பார்.......

மீண்டும் இணைகிறது 'ரோமியோ ஜூலியட்' படக்குழு

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் லட்சுமணன் இயக்கிய 'ரோமியோ ஜூலியட்' திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆனது என்பதை அனைவரும் அறிவோம்....

மீண்டும் தேசிய விருதை பெறுவாரா பிரகாஷ்ராஜ்?

கடந்த 2008ஆம் ஆண்டு பிரபல மலையாள மற்றும் தமிழ்ப்பட இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய காஞ்சிவரம் என்ற படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கு தேசிய விருது என்ற மிகப்பெரிய அந்தஸ்து ...

ஜோதிகாவின் ஐம்பதும், சூர்யாவின் முப்பந்தைந்தும்

எட்டு வருடங்களுக்கு பின்னர் தமிழ் திரையுலகில் ரீ எண்ட்ரி ஆன ஜோதிகாவின் '36 வயதினிலே' திரைப்படம் இன்று 50வது நாளை கொண்டாடி வருகின்றது...

கார்த்தி-தமன்னா படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

நாகார்ஜுனா-கார்த்தி நடிக்கவிருக்கும் பிரமாண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்...