close
Choose your channels

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பிரபல நடிகர் திடீர் விலகல்

Friday, October 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரான பெரியபழுவேட்டையர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் சத்யராஜ், திடீரென அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பொன்னியின் செல்வன்' நாவலை படித்தவர்கள் அந்த கேரக்டரின் உயரம், கம்பீரம் ஆகியவற்றுக்கு சத்யராஜ் மிகப்பொருத்தமாக இருப்பார் என்று கருத்து கூறி வந்த நிலையில் திடீரென அவர் இந்த படத்தில் இருந்து விலகியது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மணிரத்னம் விதித்த ஒரு நிபந்தனைக்கு சத்யராஜ் ஒப்புக்கொள்ளாததால் சத்யராஜ் இந்த படத்தில் இருந்து விலகியதாக தெரிகிறது. இதே நிபந்தனை காரணமாகத்தான் அருண்விஜய் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அந்த நிபந்தனை என்னவெனில் '6 மாதங்கள் கால்ஷீட் வேண்டும் மற்றும் இந்த ஆறு மாதங்களில் வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என்பதுதான்

சத்யராஜூக்கு பதில் பெரியபழுவேட்டையர் வேடத்திற்கு மணிரத்னம் வேறு எந்த நடிகரை தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.