close
Choose your channels

இந்தியாவிற்கு சவுதி கொடுக்கும் தீபாவளி பரிசு… வயிறு எரிந்து சாகும் பாகிஸ்தான்…

Thursday, October 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவிற்கு சவுதி கொடுக்கும் தீபாவளி பரிசு… வயிறு எரிந்து சாகும் பாகிஸ்தான்…

 

சவுதி அரேபியாவின் போக் ஆர்வலர் இந்தியாவிற்கு தீபாவளி பரிசு எனக் குறிப்பிட்டு ஒரு உலக வரைபடத்தை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அந்த வரைபடத்தில் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர், மற்றும் கில்கிட்-பலுசிஸ்தான் போன்ற பகுதிகள் பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இச்செயலுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.

மேலும் பாகிஸ்தானை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு நடந்து கொள்ள சவுதி முயல்வதாகவும் இது புது கூட்டணிக்கு வழிவகுப்பதாகவும் கருத்துத் தெரிவித்து இருக்கிறது. வருகிற நவம்பர் 21-22 ஆம் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு துவங்க இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த சவுதி அரசை நினைவுக்கூரும் வகையில் சவுதி அரசாங்கம் புதுமையான “20 ரியால்“ ஒன்றை வடிவமைத்து இருக்கிறது. அந்த ரியாலில் உலக வரைபடமும் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வரைபடத்தில் இதுவரை பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடி வரும் கில்கிட்-பலுசிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் நீக்கப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்து சவுதி வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவிற்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு: கில்கிட்- பலுசிஸ்தான் மற்றும் காஷ்மீரை பாகிஸ்தானின் வரைபடத்தில் இருந்து நீக்குகிறது” என்று தலைப்பிட்டு ஒரு படத்தையும் வெளியிட்டு இருக்கிறது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தான் கடும் கண்டனத்தை வெளிப்படுத்த அதற்கு பதில் கூறும் வகையில் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது அதில், கில்கிட் மற்றும் பலுசிஸ்தான் என்று அழைக்கப்படுபவை உட்பட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும் எனத் தெரிவித்து இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.