காதலர் தினத்தில் திருமணத்தை உறுதி செய்த சாயிஷா

  • IndiaGlitz, [Thursday,February 14 2019]

நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் இடையே சமீபத்தில் காதல் மலர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த திருமணம் குறித்து ஆர்யாவும், சாயிஷாவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் காதலர் தினமான இன்று சாயிஷா தனது காதல் மற்றும் திருமணம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஆசியால் நாங்கள் ஒரு புதிய வாழ்க்கையை விரைவில் தொடங்கவுள்ளோம். எங்களது திருமணம் அனைவரின் ஆசியோடு வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. எங்கள் இருவருக்கும் உங்கள் அனைவரின் ஆசியும் வாழ்த்துக்களும் தேவை என்று சாயிஷா பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்திருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து ஆர்யா-சாயிஷா திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவரும் தற்போது சூர்யாவின் 'காப்பான்' படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

நயன்தாராவின் 'ஐரா' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் 'ஐரா' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கருப்பு நயன்தாராவின்

சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய் 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து

த்ரிஷா-சிம்ரன் அடுத்த படம் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகிய இருவரும் நடித்திருந்தாலும், இருவரும் இணைந்த ஒரு காட்சி கூட படத்தில் இல்லை

சுசீந்திரனின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!

சுசீந்திரன் கடந்த ஆண்டு இயக்கிய 'ஜீனியஸ்' திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் தற்போது அவர் 'கென்னடி கிளப்', 'ஏஞ்சலினா' மற்றும் 'சாம்பியன்' ஆகிய மூன்று படங்களை இயக்கி வருகிறார்.

காதலர் தினத்தில் 10 ஆயிரம் மாணவர்களிடம் உறுதிமொழி பெற்ற அமைப்பு

இந்தியாவின் ஒருசில பகுதிகளில் 'காதலர் தினத்தன்று சுற்றித்திரியும் ஜோடிகளை பிடித்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கும் அராஜகம் நடந்து வரும் நிலையில்