பிறந்த நாளில் ரசிகர்களிடம் 'சாரி' கேட்ட சாயிஷா!

  • IndiaGlitz, [Thursday,August 13 2020]

தமிழ் சினிமாவின் நாயகிகளில் ஒருவரான சாயிஷா, பிரபல நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தற்போது ஆர்யாவுடன் ’டெடி’ என்ற படத்தில் மட்டுமே நடித்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று தனது பிறந்த நாளை சாயிஷா கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை குவித்தனர். இதனையடுத்து இன்று அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த பிறந்தநாள் உண்மையிலேயே எனக்கு மிகவும் மிகச்சிறந்த பிறந்தநாள். என்னை வாழ்த்துவதற்காக நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் மிகவும் நன்றி. இந்த நாளை நான் மிகவும் சிறப்பான நாளாக கருதுகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் நான் இங்கே இருக்க முடியாது. ரசிகர்களின் ஒவ்வொரு வாழ்த்திற்கும் என்னால் பதிலளிக்க முடியவில்லை என்பதற்காக ’சாரி’ என்று சாயிஷா அந்த டுவிட்டில் பதிவு செய்துள்ளார். சாயிஷாவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

More News

எனக்கு குரு, தெய்வம் எல்லாமே அவர்தான்: மொட்டை ராஜேந்திரனின் நெகிழ்ச்சியான வீடியோ!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவராகிய மொட்டை ராஜேந்திரன் இதற்கு முன் ஸ்டண்ட் கலைஞராக இருந்து அதன்பின் பாலாவின் 'பிதாமகன்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார்

வான்வழி வந்தோர் மேன்மக்கள், மண்வழி சென்றோர் கீழ்மக்களா? வைரமுத்து

கேரளாவில் சமீபத்தில் நிகழ்ந்த இரண்டு இயற்கை பேரிடர் அம்மாநில மக்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்தது. ஒன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை

எந்த முகக்கவசம் நல்லது- ஆராய்ச்சியில் வெளியான அதிரடி தகவல்!!!

கொரோனா வைரஸ் உலகத்தின் மூலை முடுக்குகளிலும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி கட்டுப்படுத்த முடியாத நிலைமையை உருவாக்கி இருக்கிறது

கொரோனா தாக்கம்- மாணவர் சேர்க்கைக்கு கட்டணமாக ரூ.1 நிர்ணயித்த கல்லூரி!!! ஆச்சர்யத் தகவல்!!!

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நெருக்கடி நிலைமை உருவாகியிருக்கிறது.

கொரோனா நோயாளிகளை குஷிப்படுத்த ரோபோ சங்கர் செய்த வித்தியாசமான முயற்சி

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும், நேற்று கூட 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்