இளம்பெண்ணை காருடன்  கடத்திய பள்ளி மாணவர்கள்: சென்னையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 22 2020]

சென்னையில் இளம்பெண் ஒருவரை பள்ளி மாணவர்கள் 3 பேர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு என்ற பகுதியில் ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் திடீரென ஒரு பள்ளத்தில் சிக்கியதை அடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அந்த காரின் அருகே சென்று பார்த்தனர்

அப்போது காரின் உள்ளே ஒரு இளம் பெண் கதறி அழுதபடி இருந்ததாகவும், அவருடன் மூன்று பள்ளி மாணவர்கள் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதனையடுத்து அந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்தபோது மத்திய உளவு பிரிவு ஆய்வாளர் ஒருவரின் மகள் காரில் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

அந்த பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்த ஒரு பள்ளி மாணவன் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து காரில் சென்ற பெண்ணை கடத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பள்ளி மாணவர்களையும் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர். பின்னர் அந்த இளம்பெண் பத்திரமாக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். பட்டப்பகலில் காரில் மூன்று பள்ளிமாணவர்கள் ஒரு இளம்பெண்ணை கடத்தி சென்றது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

More News

தனுஷ்-ராம்குமார் படம் குறித்த புதிய தகவல்!

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி

அந்த பத்து பேர்களில் அஜித் ரசிகர்கள் சிக்குவார்களா?

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களும் நடிகை கஸ்தூரியும் காரசாரமாக மோதிக்கொண்டு வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆபாச பதிவு செய்பவர்கள்

'மாஸ்டர்' படத்தின் புதிய ஸ்டில்: இணையதளங்களில் வைரல்

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும்,

ரஜினிகாந்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறிய அறிவுரை

சென்னை  - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 43 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 9 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாயார் திடீர் ஓட்டம்: திருமண வீட்டில் பரபரப்பு

அடுத்த மாதம் ஒரு திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மணமகனின் தந்தையும் மணமகளின் தாயார் ஓடிப் போய்விட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது