6 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பா?


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று சுமார் 1500 பேர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1 முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கியது.
மாணவர்கள் ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர் என்பதும் ஒரு சிலருக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனையில் அடுத்த கட்டமாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments