பூட்டிய வகுப்பறையில் தலைமை ஆசிரியைக்கு காதல் பாடம் எடுத்த ஆசிரியர்: கதவை தட்டிய கணவரால் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,January 24 2021]

பூட்டிய வகுப்பறையில் தலைமை ஆசிரியைக்கு, ஆசிரியர் ஒருவர் காதல் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது கதவை தட்டிய தலைமை ஆசிரியையின் கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சேலம் மாவட்டம் தலைவாசல் என்ற பகுதியில் உள்ள துவக்கப் பள்ளி ஒன்றில் 30 வயது பெண் ஒருவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக ஒருவர் பணியாற்றி வருகிறார். இருவரும் தினமும் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார்கள் என்பதும் இதனால் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை தினத்திலும் இருவரும் பள்ளிக்கு வந்து ஒரு வகுப்பறையில் பூட்டிக்கொண்டு தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தலைமை ஆசிரியையின் கணவர் நேராக அந்த வகுப்பறைக்கு வந்து கதவை தட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெளியே தனது கணவர் மற்றும் கிராம மக்கள் சூழ்ந்ததால் அச்சத்தில் தலைமை ஆசிரியை கதவைத் திறக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்து கதவை தட்டிய பின்னரே தலைமை ஆசிரியை மற்றும் அந்த ஆசிரியர் இருவரும் வெளியே வந்தனர்

இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியையின் கணவர் மற்றும் கிராம மக்கள் கூறியதை அடுத்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அலுவலர் உறுதி அளித்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 

More News

பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு கிடைத்த அன்பு பரிசு: வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் அன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அவருக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் அன்புகுரூப் என்ற பெயரை நெட்டிசன்கள் வைத்தார்கள் என்பதும் தெரிந்தது

விக்னேஷ்சிவன் - நயன்தாரா: லேட்டஸ்ட் ரொமான்ஸ் புகைப்படம் வைரல்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவனும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் என்பதும்

யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை: யுவன்ஷங்கர் ராஜா அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டு அதில்

திண்டுக்கல் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு! 3 ஆக அதிகரித்த எண்ணிக்கை!

கடந்த 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

சிறுத்தையை அடித்து கறி விருந்து சாப்பிட்ட 5 பேர் கைது!

கேரளாவில் சிறுத்தையைப் பொறி வைத்து பிடித்து குழம்பு வைத்து சாப்பிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.