close
Choose your channels

தமிழக பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் ஈபிஎஸ் உத்தரவு!

Monday, March 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31ம் தேதி வரை மூட வேண்டும் என்றும் திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளைத் தவிர வேறு புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் இயங்கலாம் என்றும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

மேலும் திரையரங்குகள் மால்கள் ஆகியவையும் மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.