100% கல்வி கட்டணத்தை செலுத்த வலியுறுத்தினால் நடவடிக்கை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,August 04 2020]

100% கல்வி கட்டணத்தை கட்ட வேண்டும் என மாணவ மாணவிகளின் பெற்றோர்களை வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன. இதனை அடுத்தே இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பிள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கல்வி கட்டணத்தை முழுவதுமாக வசூலிக்கக் கூடாது என்றும், பகுதி பகுதியாக வசூலிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே அரசும் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி 100% பள்ளி கட்டணங்களை ஒருசில தனியார் பள்ளிகள் கட்ட வேண்டும் என பெற்றோர்களுக்கு தகவல்கள் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில் ’100% கல்வி கட்டணங்களை செலுத்த வலியுறுத்தும் தனியார் பள்ளிகளின் விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

தனுஷ் ஒரு ரோபோ போன்றவர்: 'ஜகமே தந்திரம்' நடிகை புகழாராம்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி கொடுத்த உடன் இந்த படம் ரிலீசாகும்

தமிழில் பதிலளித்த சாக்சி: குதூகலத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறுமா? நடைபெறாதா? என்ற கேள்வி எழுந்த நிலையில் சமீபத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்

உருவாகிறது 'சிகப்பு ரோஜாக்கள் 2': இயக்குனர் யார் தெரியுமா?

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான த்ரில்லர் திரைப்படம் 'சிகப்பு ரோஜாக்கள்'.

டிக்டாக் நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 வரை கெடு விதித்த டிரம்ப்!

வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யாவிட்டால் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும்

மறைந்த தமிழ் நடிகரின் மனைவிக்கு ஆண்குழந்தை: மறுபிறவி எடுத்ததாக ரசிகர்கள் கருத்து!

மறைந்த தமிழ் நடிகரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் மறைந்த நடிகரே மறுபிறவி எடுத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்