தமிழகத்தில் வரும் ஜுலையில் பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் வரும் ஜுலையில் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் (2020-21 ஆம் கல்வியாண்டு) ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு தற்போது ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டு உள்ளதால் மதிப்பெண்களை கணக்கிட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டு துவங்கியுள்ளது. கூடவே கொரோனா பரவலின் இரண்டாம் அலையும் சற்று தணிந்து வருகிறது.

இதையடுத்து வரும் ஜுன் 3 ஆம் வாரத்தில் இருந்து தமிழகப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவுறித்து இருக்கிறது. மேலும் தனியார்கள் பள்ளிகள் ஜுன் முதல் வாரத்திலேயே ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி நடத்த திட்டமிட்டு வருகிறது.

இதனால் வரும் ஜுலையில் அனைத்துப் பள்ளிகளையும் திறக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு திறக்கப்படும்போது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு என தனியாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட உள்ளது.

மேலும் பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறைப்படுத்த ஜுன் 14 ஆம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை புரிய கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளவும் தமிழக அரசு வலியுறித்தி உள்ளது.

More News

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி படங்களில் பணிபுரிந்த பழம்பெரும் இயக்குனர் காலமானார்: முதல்வர் இரங்கல்

எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த படங்களிலும் கருணாநிதி கதை வசனம் எழுதிய படங்களிலும் பணிபுரிந்த பழம்பெரும் இயக்குனர் சொர்ணம் காலமானார்

பெற்றோரான புதிய அனுபவம்: மகத்தின் நெகிழ்ச்சியான பதிவு!

மகத் மற்றும் பிராச்சி மிஸ்ரா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இதனை மகத் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார் என்பதும் தெரிந்ததே.

விஜய்யை அடுத்து அஜித் படத்தில் நடிப்பதையும் உறுதி செய்த யோகிபாபு!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு சமீபத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் என்ற செய்தியைப் பார்த்தோம்.

ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட்: சத்தமின்றி சூர்யா செய்த உதவி!

இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி உள்ளனர் என்பது தெரிந்ததே. ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 4000

பொதுமக்கள் மத்தியில் ஜனாதிபதியை பளார் விட்ட இளைஞர் கைது!

பொதுமக்கள் மத்தியில் ஜனாதிபதியை கன்னத்தில் பளாரென அறைந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.