மசாஜ் செய்ய வந்த விஞ்ஞானி கடத்தல்: பிக்பாஸ் பெண் போட்டியாளர் கைது!

மசாஜ் செய்ய வந்த விஞ்ஞானியை கடத்தி வைத்துக் கொண்டு அவருடைய மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டிய பிக்பாஸ் பெண் போட்டியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டெல்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பை சேர்ந்த 35 விஞ்ஞானி ஒருவர் சமீபத்தில் மசாஜ் செய்வதற்காக ஒரு மசாஜ் சென்டரை தொலைபேசியில் அணுகியுள்ளார். இதனை அடுத்து அவரை ஒரு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி சுனிதா என்பவர் மொபைல் போனில் பதிலளித்துள்ளார். சுனிதா சொன்ன இடத்திற்கு இளம் விஞ்ஞானி சென்றபோது அந்த விஞ்ஞானியை சுனிதா, ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு, அவரது மனைவியிடம் தொலைபேசியில் அழைத்து ரூபாய் 10 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளதாக தெரிகிறது

இது குறித்து விஞ்ஞானியின் மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விஞ்ஞானியின் மனைவியுடன் மாறுவேடத்தில் காவல்துறையினர் சுனிதா குறிப்பிட்டு சொன்ன இடத்திற்கு சென்றனர். விஞ்ஞானியின் மனைவியை மட்டும் பணத்துடன் அனுப்பிவிட்டு போலீசார் மறைந்து இருந்த போது பணத்தை வாங்க வந்த சுனிதா அதிரடியாக போலீசாரிடம் பிடிபட்டார். அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்

சுனிதாவிடம் நடத்திய விசாரணையில் அவர் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் சுனிதாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

யூடியூபில் ஆபாச விமர்சனம்: அடித்து உதைத்த பெண்களால் பரபரப்பு

பெண்களை ஆபாசமாக விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோ பதிவு செய்த ஒருவரை மூன்று பெண்கள் இணைந்து அடித்து உதைத்த வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 

மதுரை ஐகோர்ட்டில் திடீரென மனுதாக்கல் செய்த நாகர்கோயில் காசி: பரபரப்பு தகவல்!

தன் மீதான வழக்கில் தனக்கு ஆதரவாக வாதாட வக்கீல்கள் யாரும் இல்லாததால் தனக்கு சட்ட உதவி கிடைக்கவில்லை என்றும் எனவே தன் மீதான வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்

புதியவகை நோய்த்தொற்றுக்கு 4 ஆம் கட்ட அவசர நிலையைப் பிறப்பித்துள்ள சீனா!!! பரபரப்பு தகவல்!!!

கடந்த ஜுன் மாத இறுதியில் சீனாவில் ஒரு புதிய வகை மர்மநோய் பரவி வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியானது.

சிவகார்த்திகேயன் பட நடிகர் தூக்கில் தொங்கி தற்கொலை: பரபரப்பு தகவல்

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான 'மெரினா' என்ற படத்தில் நடித்த நடிகர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பெருந்தலைவர்களை அடுத்து கட்சிக்குள் இபிஎஸ்க்கு குவியும் ஏகபோக ஆதரவு… தொண்டர்கள் குதூகலம்!!!

நேற்று சென்னையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.