பீகாரில் தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடிய குழந்தையை தத்தெடுத்த பிரபலம்

  • IndiaGlitz, [Saturday,May 30 2020]

கடந்த சில நாட்களுக்கு முன் பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் வெளி மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ரயில் சென்று கொண்டிருந்தபோது ரயில் பயணத்தின்போது பரிதாபமாக உயிரிழந்தார். முஷாபர்பூர் ரயில் நிலையத்தில் அந்த பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தாய் இறந்ததும்கூட தெரியாமல் அவரது ஒரு வயது குழந்தை, தாய் தூக்கத்தில் இருப்பதாக நினைத்து போர்வையை பிடித்து இழுத்து அங்கும், இங்குமாக விளையாடிக் கொண்டிருந்த காட்சிகளின் வீடியோ நாடு முழுவதும் வைரலானது. பார்த்தவுடன் கண்கலங்க வைத்த இந்த வீடியோ அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது

இந்த நிலையில் பீகார் முஷாபர்பூர் ரயில் நிலையத்தில் தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடி கொண்டிருந்த குழந்தையின் எதிர்காலம் குறித்து அனைவரும் கவலைப்பட்டு கொண்டிருந்த நிலையில், பீகார் மாநில எஸ்.டி.பி.ஐ அமைப்பை தலைவர் நசீம் அக்தர் என்பவர் அந்த குழந்தையை தற்போது தத்தெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அருண்விஜய்

பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்தரன் அவர்கள் இயக்கிய 'நேரம்' மற்றும் 'பிரேமம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

ஒரே நாளில் 938 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில்

மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர்: வடிவேலுவை பாராட்டிய பிரபல காமெடி நடிகர்

கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே. நாட்டில் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அந்த சம்பவத்தை மையமாக வைத்து ஊடகங்கள் சீரியஸாக செய்திகளை வெளியிட்டு

கொரோனா எதிரொலி: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய வசதி

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 1 முதல் நிபந்தனைகளுடன் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

குடிபோதையில் மதுபாட்டிலை உடலுக்குள் சொருகிய குடிகாரர்: டாக்டர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் மதுக் கடைகளும் மூடப்பட்டு இருந்தது. மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால்