நாளை சூர்யாவின் அடுத்த படத்தின் அப்டேட்டா? பிரபலத்தின் டுவிட்டால் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,October 05 2021]

’நாளை ஒரு சிறப்பான நாள்’ என சூர்யாவின் அடுத்த படத்திற்கு இசை அமைத்த பிரபலம் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதால் நாளை சூர்யா படத்தின் அப்டேட் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’ஜெய்பீம்’ என்பதும் இந்த படத்தை ஞானவேல் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் தெரிந்ததே. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக அமேசான் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை ஒரு சிறப்பான நாள் என இந்த படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து நாளை ’ஜெய்பீம்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்சேதுபதி மகள் நடித்த 'முகிழ்' டீசர் ரிலீஸ்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி ஆகிய மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

'தளபதி 66' படத்தில் இந்த சூப்பர் ஸ்டார் மகள் நடிக்கின்றாரா?

தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது

கணவர் இறந்தபோது நான் அழவே இல்லை: பவானி ரெட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பவானி ரெட்டி திருமணமானவர் என்றும், திருமணமான ஏழே மாதத்தில் கணவரை இழந்தவர் என்பதும் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஏற்கனவே தெரிந்தது

நடிகை என்ற பந்தாவெல்லாம் எனக்கில்லை… வீடியோ வெளியிட்ட இளம் நடிகை!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகை ராஷிகண்ணா.

இதற்குத்தான் நடிக்கவே வந்தேன்… மேடையில் உருக்கமாகப் பேசிய நடிகர் விஜய்சேதுபதி!

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவைத் தவிர தற்போது ஹிந்தி,