சிக்கலில் மாட்டிய ரிலையன்ஸ்… முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதமா?

 

முறைகேடாக நடைபெற்ற பங்கு வர்த்தகம் தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் தனது பெட்ரோலிய நிறுவனத்தின் பங்கு விற்பனையின்போது மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடி ரூபாய் அபராதமும் அதன் தலைவராக இருந்து வரும் முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியப் பங்குச் சந்தையில் நடைபெறும் மோசடிகளைக் கண்காணிக்க செபி எனப்படும் ஒழுங்குமுறை வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியம் மேற்கொண்ட விசாரணையில் ரிலையன்ஸ் நிறுவனம் வர்த்தக மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனால் செபி வாரியம் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் முகேஷ் அம்பானிக்கு அபராதத்தை விதித்து இருக்கிறது.

ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவனம் கடந்த 2009 இல் ரிலையன்ஸ் இண்டஸ்ரிஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. கொரோனா நேரத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்தபோதும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உச்சக்கட்டத்தை எட்டியது. இதனால் ஆசியாவின் முதல் பணக்காரராக முகேஷ் அம்பானி முதல் இடத்தைப் பிடித்தார். தற்போது செபி மேற்கொள்ளும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளினால் ரிலையன்ஸ் நிறுவனதிற்கு சிக்கல்கள் முளைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் ரிலையன்ஸ் தவிர இதேபோன்று வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 2 நிறுவனங்களுக்கு செபி ஒழுங்குமுறை வாரியம் ரூ.20 கோடி மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

More News

30 ஆண்டுகளுக்கு பின்னர் இளையராஜாவுடன் இணையும் இயக்குனர்!

தமிழ் திரையுலகில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த 'கேளடி கண்மணி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் வசந்த். அதன்பின்னர் 'நீ பாதி நான் பாதி' 'ஆசை' 'நேருக்கு நேர்

ரகசிய திருமணம் செய்த கமல் பட நடிகைக்கு பெண் குழந்தை: கணவர் தகவல்

கமல்ஹாசனின் விஸ்வரூபம், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகைக்கு திருமணம் ஆன தகவலே வெளியே தெரியாத நிலையில் தற்போது குழந்தை பிறந்த தகவலை அவரது கணவர் தெரிவித்துள்ளார்

ஷிவானி குறித்து பேசிய ஆரியை அடிக்க பாய்ந்த பாலாஜி!

பிக்பாஸ் வீட்டில் நேற்று லக்சரி டாஸ்க் முடிவடைந்ததில் இருந்தே ஆரி மற்றும் பாலா சண்டை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்

தமிழக காங்கிரஸில் முக்கிய பதவியை பெற்ற தமிழ் நடிகர்!

கடந்த சில மாதங்களாக பல திரையுலக பிரமுகர்கள் பாஜகவிற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழ் நடிகர் ஒருவருக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது