மனைவி பலாத்காரம் செய்யப்பட்டது கூட தெரியாமல் குறட்டை விட்டு தூங்கிய காவலாளி

  • IndiaGlitz, [Friday,April 10 2020]

சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக நேபாளி ஒருவர் பணி செய்து கொண்டு வருகிறார். அவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவியுடன் மொட்டை மாடியில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பின் முன்பகுதியில் காவலாளி குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த நிலையில் உள்ளே புகுந்த மர்ம ஆசாமி ஒருவர் ஒவ்வொரு குடியிருப்பாக நோட்டமிட்டு கடைசியாக அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் உள்ள காவலாளி வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்

வீட்டில் தனியாக இருந்த காவலாளியின் மனைவி கதவை திறந்ததும் திடீரென வீட்டுக்குள் புகுந்த அந்த மர்ம நபர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வாசலில் தூங்கிக்கொண்டிருந்த கணவனை எழுப்பி கண்ணீர் மல்க விவரித்துள்ளார் அந்தப் பெண்

இது தொடர்பாக காவலாளியும் அவரது மனைவியும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் காவலாளியின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தது பச்சை கலர் டீசர்ட் அணிந்து ஆசாமி என்பதும், அந்த ஆசாமி உள்ளாடையுடன் அங்கு சென்று சென்று கொண்டிருந்ததும் சிசிடிவி கேமரா வீடியோக்களில் இருந்து தெரிய வந்தது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் சுவர் ஏறி குதித்து ஏதாவது விலைமதிப்பற்ற பொறுப்புகள் கிடைக்குமா? என்று தேடி பார்த்து பின் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் தனியாக இருந்த காவலாளி மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது

மேலும் அந்த மர்ம ஆசாமி பெயர் ராமகிருஷ்ணன் என்றும், அவர் அந்த பகுதியில் பால் பாக்கெட்டு சப்ளை செய்யும் வேலை செய்பவர் என்பதும், பால் பாக்கெட்டுக்களை போடும்போதே ஆள் இல்லாத வீடு மற்றும் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதையடுத்து ராமகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவனை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

வீட்டில் இருங்கள், உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்: பிரபல குணச்சித்திர நடிகர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமூக விலகலை பலர் கடைபிடிக்காததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

யோகிபாபுவை அடுத்து நடிகர் சங்கத்திற்கு உதவிய பிரபல காமெடி நடிகர்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு இல்லாததால் சினிமா படப்பிடிப்பை நம்பி வாழும்

த்ரிஷா வெளியேறியதற்கு மணிரத்னம் தான் காரணம்: சிரஞ்சீவி

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்தார் என்றும் அதன் பின்னர் அவர் திடீரென அந்த படத்தில் விலகிவிட்டார்

கொரோனா உணவு வகைகள்!!!

உலக வரைபடம் முழுவதும் ஆக்கிரமித்து கொடூரமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவை தற்போது சிலர் தட்டில் வைத்து அழகுபார்த்து வருகின்றனர்.

கொரோனா; அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதுகூட பிரச்சனையா???

உலகம் முழுவதும் கொரோனா சிகிச்சை பற்றிய ஆராய்ச்சிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழல்நிலையில் தற்போது “சைட்டோகைன்“ என்ற புதிய புயலை மருத்துவர்கள் கிளப்பியிருக்கின்றனர்.