close
Choose your channels

மனைவி பலாத்காரம் செய்யப்பட்டது கூட தெரியாமல் குறட்டை விட்டு தூங்கிய காவலாளி

Friday, April 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக நேபாளி ஒருவர் பணி செய்து கொண்டு வருகிறார். அவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவியுடன் மொட்டை மாடியில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பின் முன்பகுதியில் காவலாளி குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த நிலையில் உள்ளே புகுந்த மர்ம ஆசாமி ஒருவர் ஒவ்வொரு குடியிருப்பாக நோட்டமிட்டு கடைசியாக அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் உள்ள காவலாளி வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்

வீட்டில் தனியாக இருந்த காவலாளியின் மனைவி கதவை திறந்ததும் திடீரென வீட்டுக்குள் புகுந்த அந்த மர்ம நபர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வாசலில் தூங்கிக்கொண்டிருந்த கணவனை எழுப்பி கண்ணீர் மல்க விவரித்துள்ளார் அந்தப் பெண்

இது தொடர்பாக காவலாளியும் அவரது மனைவியும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் காவலாளியின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தது பச்சை கலர் டீசர்ட் அணிந்து ஆசாமி என்பதும், அந்த ஆசாமி உள்ளாடையுடன் அங்கு சென்று சென்று கொண்டிருந்ததும் சிசிடிவி கேமரா வீடியோக்களில் இருந்து தெரிய வந்தது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் சுவர் ஏறி குதித்து ஏதாவது விலைமதிப்பற்ற பொறுப்புகள் கிடைக்குமா? என்று தேடி பார்த்து பின் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் தனியாக இருந்த காவலாளி மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது

மேலும் அந்த மர்ம ஆசாமி பெயர் ராமகிருஷ்ணன் என்றும், அவர் அந்த பகுதியில் பால் பாக்கெட்டு சப்ளை செய்யும் வேலை செய்பவர் என்பதும், பால் பாக்கெட்டுக்களை போடும்போதே ஆள் இல்லாத வீடு மற்றும் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதையடுத்து ராமகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவனை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.