ரஜினியை விட கமல்தான் அதிகம் உழைத்தவர்: பாடப்புத்தக சர்ச்சை குறித்து சீமான்

  • IndiaGlitz, [Friday,June 14 2019]

ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரஜினி குறித்த பாடம் இடம்பெற்றது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'ரஜினியை விட கமல் தான் அதிகம் உழைத்தவர் என்றும், ரஜினி குறித்து பாடம் வைத்திருப்பது வேண்டுமென்றே செய்த செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'ரேக்ஸ் டூ ரிச்சஸ் ஸ்டோரீஸ்' என்ற பாடத்தில் உழைப்பால் உயர்ந்தவர்கள் குறித்த பாடம் ஒன்று உள்ளது. அதில் ரஜினி குறித்த பாடம் அவரது புகைப்படத்துடன் உள்ளது. கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் தனது கடுமையான உழைப்பால் திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகவும் திகழ்வதாக அந்த பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரஜினியின் பெயர் இருந்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ரஜினி குறித்த பாடத்திற்கு முதல்முறையாக சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திரைத்துறையில் அதிகம் உழைத்தது கமல்தான் என்றும் அவரது பாடம் தான் உண்மையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியலில் உயர்வதற்கு உழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால் போதும் என்றும் சீமான், கமல்ஹாசனை விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செல்போன் கடையில் திருடிய தமிழ் நடிகர் மனைவியுடன் கைது

சென்னையில் உள்ள செல்போன் கடை ஒன்றில் மனைவியுடன் வந்த தமிழ் நடிகர் ஒருவர் அந்த கடையில் விலையுயர்ந்த செல்போன்களை திருடிய காட்சி சிசிடிவியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால்

கேப்டன் விஜயகாந்த் மகனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் இதுவரை 'சகாப்தம்' மற்றும் 'மதுர வீரன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து வந்த 'தமிழன் என்று சொல்' என்ற படம் பாதியிலேயே நிற்கின்றது

என்னிக்கு என்கிட்ட கதை இருந்துருக்கு: அஜித் ரசிகருக்கு வெங்கட்பிரபு பதில்

அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய 'மங்காத்தா' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் 'மங்காத்தா 2' எப்போது வரும் என அவ்வப்போது அஜித் ரசிகர்கள் வெங்கட்பிரபுவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு என்ற பகுதியை சேர்ந்த ஐயப்பன் - சரண்யா தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை பார்த்து வந்த ஐயப்பன்,

மாம்பழ கூடையுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்த நடிகை!

ஒவ்வொரு தேர்தலின்போது அதிமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்யும் நடிகர், நடிகைகளில் ஒருவர் நடிகை விந்தியா. மற்ற நட்சத்திரங்களின் பேச்சை விட இவருடைய பேச்சு ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் இருக்கும்