close
Choose your channels

விஜய் சொன்னதை செய்ய தவறியதால் தவறு நடந்து கொண்டிருக்கின்றது: சீமான்

Sunday, September 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் சமீபத்தில் தனது ‘பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் அதிகபட்சமாக ஒரு 15 நிமிடங்கள் பேசியிருப்பார். ஆனால் அவர் பேசியதை வைத்து கடந்த மூன்று நாட்களாக ஊடகங்கள் வளைத்து வளைத்து செய்தி வெளியிட்டு வருகின்றன. அரசியல் தலைவர்களும் அவர் பேசியதற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். தொலைக்காட்சி மீடியாக்கள் ஒரு படி மேலே போய் விஜய் இரண்டு நிமிடங்கள் பேசியதை இரண்டு நாட்களாக விவாதம் செய்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ‘சரியான நபரை சரியான வேலைக்கு தேர்வு செய்தால் பிரச்சனை இருக்காது’ என்று விஜய் பேசியதை ஏற்கனவே ஒருசில அரசியல் தலைவர்கள் கருத்து கூறி முடிந்த நிலையில் தற்போது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதையே நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார் என்றும், சரியான தலைவர்களை தேர்வு செய்யத் தவறியதால் தவறு நடந்து கொண்டு இருக்கிறது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.