close
Choose your channels

உதயநிதியால் திரையுலகிற்கு கிடைத்த பாதுகாப்பு: சீமான் புகழாராம்

Wednesday, May 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக ஆட்சி வந்த பிறகு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பயமுறுத்தி அனைத்து திரைப்படங்களில் ரிலீஸ் உரிமையை பெற்று வருவதாக ஒரு தரப்பு குற்றம் சாட்டி வரும் நிலையில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை வாங்கி வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் தயாரிப்பாளர்களுக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் எந்தவித இழப்பும் இல்லை என்றும் திரைத்துறையே தற்போது தான் பாதுகாப்பாக உள்ளது என்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் படங்களை வாங்கி விநியோகம் செய்வதால் திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது சரியாக கணக்கு காட்டி வருகிறார்கள் என்றும் அதனால் தயாரிப்பாளர்களுக்கு உரிய தொகை சரியாகவும் தாமதமின்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் பெரிய பட்ஜெட் படங்களை போலவே சின்ன பட்ஜெட் படங்களையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வாங்கி வெளியிட வேண்டும் என்று இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட ஒருசிலர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.