மாண்ட மருத்துவருக்கு சிதை நெருப்பு தர மனமில்லையா? சீனுராமசாமி ஆவேச கவிதை

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த ஆந்திர மருத்துவர் ஒருவரை தகனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என நேற்று முதல் அம்பத்தூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மயானம் அருகே இரவு பகலாக அந்த பகுதி மக்கள் காவல் காத்தும் உள்ளனர். கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் டாக்டர்களுக்கு கைதட்டிய பொதுமக்கள், கொரோனாவால் மரணம் அடைந்த ஒரு மருத்துவரை தகனம் செய்ய அனுமதிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் ஆவேசமாக பதிவு செய்த கவிதை ஒன்று பின்வருமாறு:

உமைக காக்க
தொட்டுத்‌ தூக்கிய
மருத்துவன்‌ மாண்டான்‌
வாழவா வழி கேட்டான்‌
அந்தோ சிதை நெருப்பை
தானம்‌ கேட்டான்‌

தர மறுக்கும்‌
மனித மனமே
நீ கைசுத்தம்‌
செய்தல்‌ போல்‌
மனச்சுத்தம்‌ செய்வாயா?

சமபந்தி வைத்த வைத்தியனை
வைத்தெரிக்க கொள்ளி
இல்லையா...?

ஜாதி பார்த்தா
இனம்‌ பார்த்தா
மொழி பார்த்தா
வந்து வேக வைக்கிறது
கிருமி..

இருமாமல்‌
துப்பி விடு
உன்‌ ஜாதியை
உன்‌ மதத்தை

அய்யோ
கிருமி மனித
இனத்தை தேடுகிறது.

சீனுராமசாமியின் இந்த கவிதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.