close
Choose your channels

மிரட்டல் விவகாரம்: சீனுராமசாமியின் முக்கிய கோரிக்கை!

Wednesday, October 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இன்று காலை திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதல்வர் அய்யா தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீனுராமசாமி, ‘விஜய் சேதுபதியை ’800’ படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியதற்காக தனக்கு மிரட்டல் வருவதாகவும், இரவில் வரும் செல்போன் அழைப்பில் ஆபாசமாக பேசி மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். விஜய் சேதுபதியின் நலனுக்காகவே தான் அந்த அறிவுரையை தான் கூறியதாகவும், விஜய் சேதுபதிக்கு எதிராக தான் கருத்து கூறியதாக ஒரு சிலர் தன்னை மிரட்டுவதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மிரட்டல்கள் தொடர்ந்து வருவதை அடுத்து இயக்குனர் சீனு ராமசாமி போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். வாட்ஸ் அப் மூலமும் செல்போன் அழைப்பு மூலமும் தொடர்ந்து மிரட்டல் வருவதாக கூறிய சீனு ராமசாமி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசில் அளித்துள்ள புகாரில் தனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார் மீது விரைவில் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.