மிரட்டல் விவகாரம்: சீனுராமசாமியின் முக்கிய கோரிக்கை!

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இன்று காலை திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதல்வர் அய்யா தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீனுராமசாமி, ‘விஜய் சேதுபதியை ’800’ படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியதற்காக தனக்கு மிரட்டல் வருவதாகவும், இரவில் வரும் செல்போன் அழைப்பில் ஆபாசமாக பேசி மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். விஜய் சேதுபதியின் நலனுக்காகவே தான் அந்த அறிவுரையை தான் கூறியதாகவும், விஜய் சேதுபதிக்கு எதிராக தான் கருத்து கூறியதாக ஒரு சிலர் தன்னை மிரட்டுவதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மிரட்டல்கள் தொடர்ந்து வருவதை அடுத்து இயக்குனர் சீனு ராமசாமி போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். வாட்ஸ் அப் மூலமும் செல்போன் அழைப்பு மூலமும் தொடர்ந்து மிரட்டல் வருவதாக கூறிய சீனு ராமசாமி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசில் அளித்துள்ள புகாரில் தனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார் மீது விரைவில் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நிலமோசடி விவகாரம்: சூரியின் அடுத்தகட்ட நடவடிக்கை

சமீபத்தில் நடிகர் சூரி, பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மீது நில மோசடி புகார் கொடுத்தார் என்பதும்

தமிழக ரசிகருக்காக கடலூர் வருவாரா தல தோனி?

தமிழகத்தைச் சேர்ந்த தீவிரமான ரசிகர் ஒருவர் தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறமாக மாற்றினார் என்றும், தனது வீட்டின் சுவரில் தோனியின் புகைப்படங்களை வரைந்தார்

ஒரே நாளில் வெளியான விஷாலின் மூன்று படங்கள் குறித்த அப்டேட்!

விஷால் நடித்த 'சக்ரா', துப்பறிவாளன் 2 ' மற்றும் ஆர்யாவுடன் அவர் நடிக்கும் படம் என மூன்று படங்களின் அப்டேட்டுக்கள் ஒரே நாளில் வெளிவந்திருப்பது விஷால் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்: விருதுநகரில் பரபரப்பு

விருதுநகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வித்தியாசமான விநாயகர் சிலைகளுடன் கொலு… அசத்தும் சென்னை பெண்!!!

நவராத்திரி வழிபாடுகளில் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது கொலு வழிபாடு. இந்தக் கொலு வழிபாடு வேறுபாடு உள்ள இந்த சமூகத்தில்