close
Choose your channels

செல்வராகவன் மகள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரா? க்யூட் குடும்ப புகைப்படம்..!

Friday, May 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் குடும்ப புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தில் உள்ள அவரது மகளை பார்த்து செல்வராகவன் மகள் இவ்வளவு வளர்ந்து விட்டாரா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்பதும் தெரிந்ததே. கடந்த சில ஆண்டுகளாக அவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

இந்த நிலையில் செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 2012 ஆம் ஆண்டு லீலாவதி என்ற மகள் பிறந்தார். மேலும் 2013 ஆம் ஆண்டு ஓம்கார் என்ற மகன் பிறந்தார்.

செல்வராகவன் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளத்தில் அவ்வப்போது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் செல்வராகவன் தனது மனைவி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் செல்வராகவன் மகளை பார்த்து ரசிகர்கள், ‘இவ்வளவு வளர்ந்து விட்டாரா? என்று ஆசிரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் செல்வராகவன் தற்போது ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.