close
Choose your channels

ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா செல்வராகவனின் அடுத்த படம்?

Thursday, January 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் கடந்த 20 ஆண்டுகளில் எட்டு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். இருப்பினும் அவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காவியமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ’என்.ஜி.கே’ என்ற திரைப்படம் வெளியான நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகிய ‘மன்னவன் வந்தானடி’ மற்றும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய இரண்டு படங்கள் ஒரு சில ஆண்டுகளாக வெளிவராமல் முடங்கி உள்ளது.

அந்த வகையில் தற்போது அவற்றில் நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்ட நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா, பாபிசிம்ஹா, பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.