close
Choose your channels

ஒருத்தன் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே இருக்குறது: 'நெஞ்சம் மறப்பதில்லை' ஸ்னீக்பீக் வீடியோ

Monday, March 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆன போதிலும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கொண்டே இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் ஒருவர் பேய் பிடித்தது போல் கத்திக்கொண்டே இருக்க அவரை சும்மா இருடா, சும்மா இருடா என்று கூறிக் கொண்டே இருக்கும் எஸ்ஜே சூர்யா திடீரென அவரை கொலை செய்கிறார். இதை பார்த்து பக்கத்தில் இருந்த அவருடைய நண்பர் எந்தவிதமான பதட்டமும் இன்றி இருக்கிறார். கடைசியில் ஒருவன் எவ்வளவு நாள்தான் நல்லவனாகவே இருக்கிறது என்ற எஸ்ஜே. சூர்யாவின் வசனத்துடன் ஸ்னீக்பீக் வீடியோ முடிவடைகிறது.

இந்த ஸ்னீக்பீக் வீடியோவை பார்க்கும் போது இந்த படம் த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.