AI காலத்தில் 'ஆயிரத்தில் ஒருவன் 2' எடுப்பது ரொம்ப ஈஸி.. ஆனால்: செல்வராகவன்


Send us your feedback to audioarticles@vaarta.com


இன்றைய AI டெக்னாலஜி காலத்தில் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் எடுப்பது ரொம்ப ஈஸியானது. ஆனால் அதே நேரத்தில், அந்த படத்திற்கு ஏராளமான நட்சத்திரங்கள் தேவைப்படுகிறார்கள்; ஆண்டு கணக்கில் கால்ஷீட் தேவைப்படும். அதெல்லாம் ஒருங்கே அமைந்தால் தான் அந்த படத்தை எடுப்பேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் பார்த்திபன் நடித்த ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியான நிலையில், அதில் தனுஷ் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு, இந்தப் படம் குறித்த எந்த செய்தியும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், இயக்குனர் செல்வராகவன் கூறிய போது, “ ஆயிரத்தில் ஒருவன் 2’ உருவாக்கப்படும் என்றால் கார்த்தி இல்லாமல் முடியாது. அந்த உலகத்திற்கு திரும்ப செல்லும்போது, சமூக அளவில் எனக்கு ரொம்ப நுணுக்கங்கள் தேவைப்படுகிறது. சோழர்கள், பாண்டியர்கள் குறித்த குறிப்புகள் தேவை. இது கொஞ்சம் கஷ்டமான விஷயம். அதற்கேற்ற மாதிரி நட்சத்திரங்கள் எனக்கு கிடைக்க வேண்டும்; கிட்டத்தட்ட ஒரு வருட கால்ஷீட் தேவைப்படும். நான் நினைத்தால் மட்டும் இந்த படத்தை உருவாக்க முடியாது. இந்த படத்திற்கு தேவையான நட்சத்திரங்களும், சரியான பட்ஜெட்டில் தயாரிக்க தயாரிப்பாளர்களும் தேவைப்படுகிறார்கள்.
’ஆயிரத்தில் ஒருவன்’ படம் எடுக்கும்போது VFX ரொம்ப காஸ்ட்லியாக இருந்தது. ஆனால் தற்போது VFX ரொம்ப குறைந்து விலையில் வந்துவிட்டதால், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பது ரொம்ப ரொம்ப ஈஸி. AI டெக்னாலஜியையும் பயன்படுத்தி கொள்ளலாம். காலம் கனிந்து வந்தால், நான் நினைக்கும் நட்சத்திரங்களின் தேதிகள் கிடைத்தால், இந்த படம் விரைவில் உருவாகும்" என்று அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments