என்னை திட்டிகிட்டே இருக்க.. மனைவி குறித்து புலம்பல் வீடியோ வெளியிட்ட செல்வராகவன்..!

  • IndiaGlitz, [Thursday,February 29 2024]

இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி தன்னை திட்டிக் கொண்டே இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன் அதன் பிறகு பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பதும் தற்போது அவர் சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்த செல்வராகவன் அவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவனுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ள நிலையில் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படத்தை பதிவு செய்து வருவார். இந்நிலையில் சற்றுமுன் அவர் பதிவு செய்த வீடியோவில் ’நீ இருந்தும் உன் கூட இருக்க முடியல, நீ இல்லாமலும் என்னால இருக்க முடியல, நான் என்ன பண்றது என்று எனக்கு தெரியல, ஏன்னா நீ என்னை திட்டிக்கிட்டே இருக்க, நிறுத்து’ என்று செல்லமாக சண்டை போட்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் செல்வராகவன் தற்போது ‘7ஜி ரெயின்போ காலனி 2’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ராயன்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கர்ப்பம்.. எந்த மாதத்தில் குழந்தை பிறக்கும்?

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும்

தமிழகத்தில் வசூலை வாரி குவிக்கும் மலையாள படம்.. நேரில் அழைத்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மாள் பாய்ஸ்' என்ற திரைப்படம் தமிழகத்திலும் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அதன் படக்குழுவினரை நேரில் அழைத்த அமைச்சர் உதயநிதி அவர்களுக்கு தனது

சமீபமாக கே.ஆர்.வத்சலா பகிர்ந்த சுவாரசியமான வாழ்க்கை பயணம்.

அக்கா சினிமாவிற்காகவும் கலைக்காகவும் நிறைய அர்ப்பணிப்பு செய்தாள் . பெரும்பாலும் பக்தி ஆன்மிக வேடங்களில் நடித்தாள் .பல தடைகள் இருந்தாலும் இந்த துறையில் சாதிக்க முடிந்தது.............

காலில் விழுந்து நன்றி சொன்ன எம்.சி.ஏ பட்டதாரி.. கேபிஒய் பாலாவின் நெகிழ்ச்சியான செயல்..!

எம்.சி.ஏ படித்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு கேபிஒய் பாலா உதவி செய்த நிலையில் அவர் கண்ணீருடன் நா தழுதழுக்க காலில் விழுந்து நன்றி சொன்னபோது பாலா அதிர்ச்சி அடைந்து

'கோட்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி.. எந்த நாட்டில் இருந்து தெரியுமா?

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதாக