close
Choose your channels

'தி எண்ட்' கார்டு போட்ட செல்வராகவன்: ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்ஸ் 

Tuesday, September 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’தி எண்ட் என்று பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது ‘சாணிக் காகிதம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அடுத்து அவர் தனுஷ் நடித்துள்ள ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் ’புதுப்பேட்டை 2’, ’ஆயிரத்தில் ஒருவன் 2’ ஆகிய படங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூகத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’தி எண்ட் என பதிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த பதிவுக்கு ரசிகர்கள் வேற லெவல் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். சாணிக்காகிதம் படம் நிறைவு பெற்றதா? என்றும் ’பீஸ்ட்’ படத்தில் உங்கள் பகுதியின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதா? என்றும் உங்க குடும்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டதா? என்றும் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் இதற்கு என்ன அர்த்தம் என்றே புரியவில்லை என்றும் பதிவு செய்து வருகின்றனர். ’தி எண்ட்’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை செல்வராகவனே விளக்குவாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.