close
Choose your channels

சமீபத்தில் பிறந்த மகனுடன் செல்வராகவன்: வைரல் புகைப்படம்!

Wednesday, May 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே லீலாவதி மற்றும் ஓம்கார் ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு ரிஷிகேஷ் என்று பெயர் வைத்தனர்

இந்த குழந்தையின் புகைப்படங்களை செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தங்களுடைய சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவு செய்து வந்தனர் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன என்பதும் தெரிந்ததே

இதன் நிலையில் சற்று முன் செல்வராகவன் தனது மூத்த மகன் மற்றும் சமீபத்தில் பிறந்த குழந்தையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ’என்னுடைய மகன்களுடன் நான்’ என்று கேப்ஷன் உடன் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் ‘சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தனுஷ் நடிக்க உள்ள அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ‘தளபதி 65’ படத்தின் வில்லனாகவும் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.