'நெஞ்சம் மறப்பதில்லை' சென்சார்-ரிலீஸ் எப்போது? செல்வராகவன்

  • IndiaGlitz, [Saturday,March 04 2017]

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் திட்டம் குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் எந்த நேரத்திலும் சென்சார் செய்ய தயாராக இருப்பதாகவும், சென்சாருக்கு பின்னர் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாகவும், தான் அவரை பின்பற்றி வருவதாகவும் கூறியுள்ளார். எனவே இந்த படம் மிக விரைவில் சென்சார் செய்யப்பட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளனர்.

More News

மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் நடித்த மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான 'மொட்ட சிவா கெட்ட சிவா' திரைப்படம் கடந்த மாதமே வெளியாக இருந்தது.

திமுகவில் சேர்ந்த பிரபல நடிகருக்கு கனிமொழி கண்டனம்

சமீபத்தில் பிரபல நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான ராதாரவி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முன்பு திமுகவில் சேர்ந்தார்.

சர்ச்சைக்குரிய புகைப்படங்களுக்கு சஞ்சிதா ஷெட்டி விளக்கம்

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் மற்றும் அவருடைய மொபைல் போன் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு அதில் பிரபல கோலிவுட் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

என்ன நடக்கின்றது டுவிட்டரில்? கோலிவுட்டில் பரபரப்பு

கடந்த சில நாட்களாகவே பிரபல பாடகி ஒருவரின் டுவிட்டரில் சர்ச்சைக்குரிய தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவை பதிவாகி கோலிவுட்டின் ஒருசிலரை தூங்கவிடாமல் செய்துள்ளது.

சுசித்ரா விவகாரம். பிரபல பாடகி சின்மயி தன்னிலை விளக்கம்

பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தள பக்கம் கடந்த சில நாட்களாக ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு அதில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளிவந்து சர்ச்சைக்குள்ளாகி வருவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.