அதர்வாவின் 'செம போத ஆகாதே' பாடல்கள்-டிரைலர் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Monday,November 20 2017]

அதர்வா நடித்து, தயாரித்து வரும் 'செம போத ஆகாதே' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆரம்பித்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகும் தேதியை அதர்வா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள் வரும் நவம்பர் 22ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் புதன்கிழமை வெளியாவுள்ளதாகவும், அன்றே இந்த படத்தின் டிரைலரும் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அதர்வா அறிவித்துள்ளார்.

அதர்வா, மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இவர்தான் அதர்வா அறிமுகமான 'பாணா காத்தாடி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

More News

குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம்: யூனிசெப் தூதர் த்ரிஷா கருத்து

யூனிசெப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

'தீரன்' படத்தை திருட்டு இணையதளத்தில் பாருங்கள்: தயாரிப்பாளரின் தைரியமான பதில்

கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் கார்த்தியின் பெஸ்ட் படமாக அமைந்திருக்கும் நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் - பொன்ராம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'வேலைக்காரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

'தல'யின் 'தலைவி ஷாலினி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தல அஜித்தின் தலைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் IndiaGlitz அவருக்கு உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

குற்றவாளிகள் நாடாளக்கூடாது! டுவிட்டரில் பொங்கிய கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக டுவிட்டரில் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் சமூக விழிப்புணர்வுகளுக்கான புரட்சிகரமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.