செந்தில் காமெடியை அவருடைய பேத்தி பேசும் அழகே தனி: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,May 30 2022]

காமெடி நடிகர் செந்தில், கவுண்டமணி உடன் நடித்த காமெடி காட்சி ஒன்றை செந்திலின் பேத்தி மிருதி பேசும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் செந்தில் என்பதும் அவர் கவுண்டமணியுடன் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. மலையூர் மம்பட்டியான் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள செந்திலுக்கு மணிகண்டபிரபு, ஹேமச்சந்திர பிரபு என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மணிகண்டபிரபு ஒரு பல் டாக்டர் என்பதும் இவருக்கும் மிருதி என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செந்திலின் பேத்தி மிருதி கவுண்டமணியுடன் செந்தில் இணைந்து நடித்த ’புலி’ காமெடி காட்சி ஒன்றை நடித்து காண்பித்தபோது செந்தில் அதை மகிழ்ச்சியுடன் ரசிக்கும் வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

என்னை கிண்டல் செய்வதாக நினைத்து தரத்தை தாழ்த்தி கொள்ள வேண்டாம்: வெங்கடேஷ் பட்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் 'கடந்த வார நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது என்று கூறினார்.

சிவகார்த்திகேயனை அடுத்து ரஜினியை சந்தித்த 'டான்' பிரபலம்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இன்று காலை கார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின் வந்த அஜித்தின் அதிகாரபூர்வ பதிவு: ஸ்தம்பித்த இணையதளங்கள்!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதால் அவர் சொல்ல விரும்பும் கருத்துகளை தனது மேனேஜரின் சமூக வலை தளங்கள் மூலமே வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே

கட்டிப்பிடிக்கும் கணவர், கர்ப்பமானதை அறிவித்த சன் டிவி தொகுப்பாளினி!

சன் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஒருவர், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

உள்ளாடை விளம்பரத்தில் கே.எல்.ராகுல்: நடிகை கஸ்தூரியின் கமெண்ட் என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் உள்ளாடை விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.