கர்ப்பமான நிலையிலும் கோப்பையை வென்றாரா செரீனா வில்லியம்ஸ்?

  • IndiaGlitz, [Thursday,April 20 2017]

உலகின் நம்பன் ஒன் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையும் டென்னிஸ் உலக சூப்பர் ஸ்டாருமான செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாகியுள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. அவர் இந்த ஆண்டில் உள்ள டென்னிஸ் தொடர்களில் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி செரீனா வில்லியம்ஸ் அவர்களுக்கும் பிரபல அமெரிக்க தொழிலதிபர் அலெக்ஸ் ஒஹானியன் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் செரீனா வில்லியம்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தனது பெருத்த வயிறுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்து '20 வாரங்கள்' என்று குறிப்பிட்டார். ஆனால் அந்த போஸ்ட்டை அவர் சில மணி நேரங்களில் நீக்கிவிட்டாலும் அவரது செய்தித்தொடர்பாளர், செரீனா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.

செரினாவின் சமூகவலைத்தள செய்தியின்படி அவர் 20 வாரங்கள் கர்ப்பம் என்றால் சுமார் ஐந்து மாதங்கள் அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தில் கலந்து கொண்டு பட்டம் வென்றார். அப்படியெனில் அவர் ஒருமாதம் கர்ப்ப நிலையில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்பம் அடைந்த பெண்கள் முதல் மூன்று மாதங்கள் அலுங்காமல் குலுங்காமல் இருக்க வேண்டும் என்ற நிலையில் செரீனா வில்லியம்ஸ் கர்ப்ப நிலையில் இருந்து கொண்டே டென்னிஸ் விளையாடி கோப்பையையும் வென்றுள்ளார் என்றால் அவரது வில்பவர் எவ்வளவு என்பதை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்.

More News

சூடு பிடித்தது சமுத்திரக்கனியின் 'தொண்டன்' வியாபாரம்

சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன நிலையில் அவர் இயக்கி நடித்துள்ள அடுத்த படம் 'தொண்டன்.

தினகரனை தேடி வந்த டெல்லி போலீஸ். தீக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு

தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக டிடிவி தினகரனிடம் சம்மன் அளிக்க நேற்று இரவு டெல்லி போலீசார் சென்னைக்கு வந்தனர்...

சமந்தா எடுத்துள்ள புதிய சவால். ஒரு ஆச்சரிய வீடியோ

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா தற்போது பிசியான நடிகைகளில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது விஜய்யுடன் 'தளபதி 61', விஷாலுடன் 'இரும்புத்திரை', விஜய்சேதுபதியுடன் 'அநீதி கதைகள்' மற்றும் ஒருசில தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார்...

டுவிட்டரை தெறிக்கவிட்ட சிம்பு ரசிகர்கள். ஒரே நாளில் 20 ஹேஷ்டேக்குகள்

சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் இரண்டு பாகங்களில் வெளிவரும் என்றும், சிங்கிள் பாடல் விரைவில் வெளிவருகிறது என்றும், நேற்று வெளியான தகவலால் டுவிட்டர் தெறிக்க ஆரம்பித்தது...

ஜெயலலிதா பங்களா அருகே ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது அவ்வபோது ஓய்வு எடுக்கும் இடம் சிறுதாவூர் பங்களா என்பது அனைவரும் அறிந்ததே. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த பங்களா, அவர் உயிருடன் இருந்தவரை கடும் பாதுகாப்பில் இருந்தது...