close
Choose your channels

பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்

Thursday, July 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அரசியல்வாதிகள், திரை உலக பிரபலங்கள் என பலரையும் பாகுபாடின்றி கொரோனா வைரஸ் தாக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார்

தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட ஒருசில சீரியல்களிலும் தெலுங்கில் பல சீரியல்களிலும் நடித்து வருபவர் நவ்யா சுவாமி இவர் சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது

நேற்று அவருடைய கொரோனா பரிசோதனையின் ரிசல்ட் வந்த போது அதில் பாசிட்டிவ் என்று இருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து அவர் உடனடியாக படப்பிடிப்பு செல்வதை நிறுத்திவிட்டு தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

மேலும் தொலைக்காட்சி நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும் செய்திகள் வெளிவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.