இவர் உங்கள் மகளா? தங்கையா? சீரியல் நடிகையிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்வி!

  • IndiaGlitz, [Wednesday,June 23 2021]

பிரபல தமிழ் சீரியல் நடிகை ஒருவர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் இவ்வளவு இளமையாக இருக்கும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா? உண்மையில் இவர் உங்கள் மகளா? அல்லது தங்கையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கண்ணான கண்ணே’ என்ற சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பவர் நித்யா தாஸ். ஏற்கனவே இதயம், அன்பே வா, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நித்யா தாஸ் சமீபத்தில் தனது மகள் மற்றும் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தையும், மகளுடன் இருக்கும் இன்னொரு புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உண்மையில் இது உங்களின் மகளா? அல்லது தங்கையா? இன்று கமெண்ட்ஸ் பகுதியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் நித்யா தாஸ் மற்றும் அவருடைய மகள் ஸ்கூல் யூனிபார்மில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இருவரும் ஒரே வகுப்பில் படிக்கிறார்களா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வசூல்ராஜா ஸ்டைலில் புற்றுநோயால் அவதிப்படும் ரசிகருக்கு நம்பிக்கை ஊட்டிய நடிகர் கமல்!

கனடாவில் இருக்கும் சாகேத் என்பவர் மூளை புற்றுநோயால் அவதிப்படுவதாகவும் அவர் தனது தீவிர ரசிகர் என்பதையும் தெரிந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் சாகேத்துடன்

தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு…. உறுதிப்படுத்திய சுகாதாரத்துறை!

சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக மருத்துவத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, மாடியில் இருந்து வீசிய இளைஞர்கள்… பகீர் வீடியோ!

உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 3 இ

தனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் சூப்பர் அப்டேட்  தந்த தயாரிப்பாளர் தாணு!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'நானே வருவேன்' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பது தெரிந்ததே.

மதுக்கடைகளை மூட முதல்வர் அதிரடி உத்தரவு: மாற்று வழியை கண்டுபிடித்த மதுப்பிரியர்கள்!

தமிழக மற்றும் கேரள எல்லையில் உள்ள மதுக்கடைகளை மூட கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது