close
Choose your channels

சிம்புவை திருமணம் செய்ய தர்ணா செய்த நடிகை: திடீரென 'அண்ணா' என அழைத்ததால் பரபரப்பு

Thursday, July 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவை தான் திருமணம் செய்வேன் என்றும் நானும் அவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம் என்றும் கூறிய நடிகை ஒருவர் திடீரென சிம்புவை ‘அண்ணா’ என்று அழைத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென இரவில் சிம்புவின் வீட்டின் முன் உட்கார்ந்து சிம்புவை தான் திருமணம் செய்வேன் என்று தர்ணா செய்தார். இதனை அடுத்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டதாகவும் அவருக்கு புழல் பகுதியில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தற்போது அவரது மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஸ்ரீநிதி, ‘சிம்பு என்னைத்தான் திருமணம் செய்து கொள்வார் என்று எனக்கு நானே கற்பனை செய்து கொண்டேன் என்றும் சிம்பு மீது எனக்கு எந்த விதமான காதலும் இல்லை என்றும் அவர் எனக்கு அண்ணன் மாதிரி என்றும் கூறியுள்ளார். மேலும் சிம்பு அண்ணா என்னை மன்னித்து விடுங்கள் என்றும் நான் மன அழுத்தத்தில் இருந்ததால் அப்படி நடந்துகொண்டேன் என்றும் என் நிலைமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சிம்புவை திருமணம் செய்து கொள்வேன் என்று தர்ணா செய்த நடிகை திடீரென அவரை ‘அண்ணா’ என பேட்டியில் அழைத்திருப்பது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.