டெங்குவில் இருந்து மீண்ட சீரியல் நடிகை.. உடனே ஒரு ஆன்மீக பயணம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த ’மகாநதி’ தொடரில் நடித்த நடிகை திவ்யா தற்போது உடல்நிலை சீரானதை அடுத்து ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மகாநதி’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் கங்கா என்ற கேரக்டரில் நடிகை திவ்யா நடித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென திவ்யாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதை அடுத்து சமீபத்தில் இந்த தொடரில் இருந்து அவர் விலகியதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது ’சிங்க பெண்ணே’ தொடரில் நடித்து வரும் நடிகை தாரணி, கங்கா கேரக்டரில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த திவ்யா, தற்போது உடல்நலம் தேறியதை அடுத்து தனது தோழியுடன் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி தினமான நேற்று அவர் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments