close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் வில்லி நடிகையா? என்ன ஆகப்போகுதோ..?

Monday, September 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் வரும்போதுதான் விறுவிறுப்பு அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில் 7வது சீசனில் சர்ச்சைக்குரிய ஒரு சிலர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்த், நடிகை தர்ஷா குப்தா, நடிகர் பப்லு பிரித்விராஜ், நடிகை இந்திரஜா, சீரியல் நடிகர் குமரன், குக் வித் கோமாளி பிரபலம் ரவீனா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பவர் சீரியல் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் என்று கூறப்படுகிறது. இவர் ’ராஜா ராணி 2’ சீரியலில் வில்லியாக நடித்து கலக்கிய நிலையில் சண்டை கோழியாக வலம் வந்த இவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் என்ன ஆகுமோ? என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில் பிக்பாஸ் வீடு மட்டும் இரண்டு இல்லை, வீட்டை இரண்டாக்கும் போட்டியாளர்களும் இந்த சீசனில் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.