close
Choose your channels

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சந்தானம் பட இயக்குனர்!

Saturday, February 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் இன்னும் அந்த படம் ரிலீஸாகவில்லை. சந்தானம் நடித்த ’டகால்டி’ திரைப்படம் கடந்த 31ஆம் தேதி வெளியான நிலையில் அதே தேதியில் சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’ என்ற திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியிலும் ரிலீஸ் ஆகாமல் தற்போது இந்த படம் பிப்ரவரி 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ரிலீஸ் தேதி குறித்த தவறாக அறிவிப்புகளுக்கு ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒருசிலர் செய்த தவறுகளினால் இது நடந்துள்ளது. இந்த படத்தின் பிரச்சனை அனைத்தும் முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன். எனவே சந்தானம் உள்பட படக்குழுவினர் விரைவில் புரமோஷனை தொடங்கவுள்ளனர். விரைவில் சரியான ரிலீஸ் தேதியை அறிவிக்கின்றோம் என்று கூறியுள்ளார். இதிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதியும் இந்த படம் வெளிவர வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாந்தில்யா என்பவர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கிரண் ரத்தோட், ராதாரவி, மயில்சாமி, சினேகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.