நீங்கள் தூரமாக இல்லை. நெருக்கமாகத்தான் இருக்கிறீர்கள்: நடிகர் சேதுராமன் மனைவியின் நெகிழ்ச்சியான பதிவு!

சந்தானம் நடித்த ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகர் சேதுராமன் ஒரு டாக்டர் என்பதும் அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என்பதும் தெரிந்ததே.

35 வயதான ஒரு நல்ல டாக்டர் மட்டும் நடிகர் மறைந்தது திரையுலகிற்கும் மருத்துவ துறைக்கும் பேரிழப்பாக இருந்தது. இந்த நிலையில் சேதுராமன் மரணம் அடைந்தபோது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார் என்பதும் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது என்பதும் இதனை அடுத்து சேதுவே குழந்தையாக பிறந்து விட்டதாகவும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது சேதுராமன் இறந்து ஒரு வருடம் ஆகி உள்ளதை அடுத்து அவரது மனைவி உமா ஒரு நெகழ்ச்சியான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

'மா' இப்படித்தான் நான் உங்களை என்றுமே அன்போடு அழைத்திருக்கிறேன். உங்கள் பெயரை வைத்து இதுவரை அழைத்ததே இல்லை. அது ஏனென்றால் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் உங்கள் மீது அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன்.

எனது தினசரி வாழ்க்கை உங்களைச் சுற்றி, உங்களை மட்டுமே சுற்றி இருந்தது. உங்கள் சந்திப்புகளை/ பயணங்களை/ தினசரி நோயாளிகள் பட்டியலை/ உடற்பயிற்சி நேரத்தை/ உணவை/ ஓய்வைத் திட்டமிடுவேன்.

4 வருடங்களில் உங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்திருக்கிறேன். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி மட்டுமே நினைத்திருக்கிறேன். அதை சாத்தியப்படுத்த என்னால் முடிந்த வகையில் சின்னசின்ன வழிகளில் உதவியிருக்கிறேன்.

நீங்கள் கனவு காண்பதை நிறுத்தியதே இல்லை. உங்கள் கனவுகளை நனவாக்க சாத்தியப்படும்போது நான் வேண்டாம் என்று சொன்னதே இல்லை.

உங்களுக்குக் கிடைக்க அரிதான ஒரு உதவியாளர் நான், அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் என்று பல முறை சிறுபிள்ளைத்தனமாக நாம் பேசியிருக்கிறோம். பணம் என்றுமே உங்களுக்கு முக்கியமாக இருந்ததில்லை. மகிழ்ச்சியும் அன்பு மட்டுமே முக்கியம்.

உங்களுக்கு நெருக்கமானவர்கள் வருத்தமாக இருந்தால் உங்களால் உறங்க முடியாது. அதிகம் சிந்திக்கும், ஆர்வம் கொண்ட, ஆத்மார்த்தமான, குழந்தைத்தனமான, அப்பாவியான, முதிர்ந்த ஆன்மா நீங்கள். உங்களையும் உங்கள் குணங்களையும் யாராலும் பிரதி எடுக்க முடியாது.

ஒரு வருடம் அதற்குள் முடிந்துவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. நீங்கள் கதவைத் தட்டுவீர்கள் என்று இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். தட்டுவீர்களா?

வேதாந்தும், சஹானாவும் வளர்ந்து கதவைத் தட்டும் வரை நான் காத்திருப்பேன்.

நீங்கள் தூரமாக இல்லை. எங்களால் கேட்க, பார்க்க முடியாத அளவு நெருக்கமாக இருக்கிறீர்கள்.

More News

முன்னாள் கணவர் மரண செய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்ட நடிகை!

பிக்பாஸ் மலையாளம் சீசன் 3 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரின் முன்னாள் கணவர் காலமான செய்தியை கேட்டு அவர் கண்ணீர் விட்ட

தடுப்பூசி போட்டு கொண்ட ஒருசில நாட்களில் கொரோனா பாதிப்பு: 'சூரரை போற்று' பட நடிகர் அதிர்ச்சி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரனோ பாதிப்பு மிக அதிகமாகி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி வருகின்றன. ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து

ஜூவாலா கட்டாவுடன் திருமணம் எப்போது? விஷ்ணு விஷால் பேட்டி

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து வருகிறார் என்பதும் இருவரும் விரைவில் திருமணம் செய்து

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அட்டகாசமான பீச் புகைப்படம் வைரல்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பீச்சில் ஊஞ்சல் ஒன்றில் ஆடுவது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது 

விஜய் படத்தை இயக்குகிறேன்: தேசிய விருது பெற்ற இயக்குனர் உறுதி!

தளபதி விஜய் நடிக்க உள்ள படத்தை இயக்க இருப்பதாக தேசிய விருது பெற்ற இயக்குனர் ஒருவர் உறுதியுடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்