close
Choose your channels

'செவ்வந்தி' சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இந்த பிரபலமா? திருமண புகைப்படங்கள் வைரல்..!

Sunday, September 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலில் நடித்த நடிகை ஒருவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் தற்போது அவருக்கு திருமணம் நடந்துள்ளது. திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

சன் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ’செவ்வந்தி’. இந்த சீரியலில் அர்ச்சனா என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் ரம்யா கௌடா. இந்நிலையில் இவர் திடீரென 'செவ்வந்தி’ சீரியலில் இருந்து விலகி விட்டார். இந்த சீரியலில் இருந்து அவர் ஏன் விலகினார் என்று காரணம் தெரியாமல் இருந்த நிலையில் தான் தற்போது அவருக்கு திருமணம் ஆகியுள்ளது

'செவ்வந்தி’ ரம்யாவை திருமணம் செய்தவர் பார்கவ். இவரும் ஒரு சீரியல் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. பார்கவ் சீரியலில் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ’

கடந்த சில ஆண்டுகளாக பார்கவ் மற்றும் ரம்யா கவுடா ஆகிய இருவரும் காதலர்களாக இருந்த நிலையில் தற்போது இரு தரப்பு பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டனர். தனது திருமணம் குறித்த புகைப்படங்களை ரம்யா கௌடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்திற்கு பல சின்னத்திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.