கிராம பெண்களை குறி வைத்த தடகள பயிற்சியாளர்....! தொடரும் பாலியல் வன்புணர்வுகள்....!

பிரபல தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது  ஏராளாமான பெண்கள், பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார்கள்.

 தமிழகத்தில் பிரபல தடகள பயிற்சியாளராக இருந்து வருபவர் தான் நாகராஜன். இவர் சென்னை, பாரிஸ்கார்னரில் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். பல முன்னணி வீராங்கனைகளை உருவாக்கிய இவர் மீது, பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

என்னுடைய ஜூனியரான 17 வயதுள்ள  பெண், பயிற்சியாளர் செய்த பாலியல் தொல்லைகள் குறித்து என்னிடம் கூறினார். இது குறித்து  பத்திரிக்கையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

கிராமத்து ஏழை பெண்களிடம் குறி வைத்து நாகராஜன் பாலியில் சீண்டல்களை செய்துள்ளார். 16,17 வயதுள்ள பெண்கள் என்றும் பாராமல், அவர்களை தனது இச்சைக்கு இணங்க வைத்துள்ளான் இந்த கொடூரன். அவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் குரல் கொடுத்தும்,  எங்களுக்கு போதுமான ஆதரவு கிடைத்ததால், இனி மேல் இதுபோல் நான் செய்யமாட்டேன் என நாகராஜன் உறுதியளித்தார். அதனை அவரை விட்டுவிட்டோம்.

ஆனால்  நாகராஜனின் பாலியல் சீண்டல்களுக்கு, உண்டான பெண்கள்  மிகச்சிறப்பான அத்லெட்டுகள்.  இந்த சிக்கலில் மாட்டும் பெண்கள் வேறு அகாதெமிக்கு  மாற வேண்டும், இல்லையெனில் விளையாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற சூழலுக்கு  உள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக கிராமத்துப்பெண்கள் மற்றும் வறுமையில் வாடும் பெண்களை குறி வைத்து தாக்குகிறான் இந்த பயிற்சியாளர். காரணம் அவர்களால் வெளியில் சொல்லமுடியாது, தங்களை காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பதால் தான்.

நாகராஜன் பல ஏழைப்பெண்களை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தியதாலும், மாதக்கணக்கில் வைத்து துன்புறுத்தியதாலும்,  அவர்கள் மனதளவிலும், உடலளவிலும்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒய்எம்சிஏவில் உள்ள அவர் வீட்டில் எனது ஜூனியர் பெண்ணை, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளார். 16 வயதே நிரம்பிய பெண் தான் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாகவும் என்னிடம் கூறியுள்ளார்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள அலுவலகத்தில், பயிற்சி கொடுக்கும் போது நாகராஜனை பார்த்திருக்கிறேன். பயிற்சி முடித்துவிட்டு, எல்லாப்பெண்களையும் அனுப்பு விடுவார். ஆனால் ஒரு பெண்ணை மட்டும் வற்புறுத்தி தான் சொல்வதையெல்லாம் செய்யச் சொல்வார். அந்தப்பெண் அழுதவாறு என்னிடம் இதை கூறியும் அவருக்கு என்னால் உதவ முடியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அத்லெட்டின் தந்தை ஒருவர், நாகராஜனின் பாலியல் சீண்டல்கள் குறித்து புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியா ஒரு அற்புதமான நாடு: தனுஷூடன் நடித்த ஹாலிவுட் நடிகர் டுவிட்!

தனுஷூடன் நடித்த ஹாலிவுட் நடிகர் ஒருவர், 'இந்தியா மிகவும் அற்புதமான நாடு என்றும் இந்தியாவில் ஒரு சிறந்த படத்திற்காக நேரத்தை செலவிட்டதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் பதிவு செய்துள்ளார்

சேஷாத்ரி பள்ளியில் உயிரிழந்த இயக்குனரின் மகன்...! மறக்கப்பட்ட சோக நிகழ்வு....!அதிகாரம் குறித்த அலசல்...!

இரண்டு நாட்களாக சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற சம்பவம் தான் வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் உலாவி வருகிறது. ஆசிரியான ராஜகோபாலன், தனது இச்சைக்காக மாணவிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது,

தடுப்பூசி மட்டும் போடாமல் இருந்திருந்தால்? கொரோனா பாதித்த தமிழ் நடிகர் பேட்டி!

கொரனோ தடுப்பூசி மட்டும் போடாமல் இருந்திருந்தால் தனது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்திக்கும் என பிரபல தமிழ் நடிகர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 

102 டிகிரி காய்ச்சல்: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிக்பாஸ் பிரபலத்தின் பதிவு!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன

நடிகர் ரகுமானுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரலாகும் குடும்ப புகைப்படம்

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய 'நிலவே மலரே' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ரகுமான். அதன் பின்னர் இவர் பாலச்சந்தரின் 'புதுப்புது அர்த்தங்கள்' என்ற படத்தின் மூலம் பிரபலமானார்