பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை… தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியருக்கும்!

  • IndiaGlitz, [Tuesday,January 19 2021]

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஆசிரியர் ஒருவருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது அம்மாவட்டத்தின் மகிளா நீதிமன்றம். அதேபோல அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கு போக்சோ சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறையும் இன்னொரு சட்டப் பிரிவின் கீழ் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த நரியன்புதுப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றியப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றிய ஆசிரியர் அன்பரசன் (52) அங்கு படித்து வந்த பல மாணவிகளிடம் பாலியல் நோக்கில் தவறாக நடந்து கொண்டார் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி குற்றம் சட்டப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் (50) எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகி இருக்கின்றனர்.

இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அன்பரசன் மற்றும் ஞானசேகரனை கைது செய்து இதுகுறித்த மனுவை மகிளா நீதிமன்றத்திற்கும் அனுப்பினர். அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, 3 மாணவிகள் அளித்த சாட்டியத்தின்படி போக்சோ சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ், வழக்கில் சிக்கிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டு இருக்கிறார். மேலும் பாலியல் அச்சுறுத்தலை வெளியே சொல்ல வேண்டாம் என மாணவிகளை அச்சுறுத்தியக் குற்றத்திற்காக அன்பரசனுக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

அதேபோல பாதிக்கப்பட்ட 6 மாணவிகள் அளித்த சாட்சியத்தின்படி ஆசிரியர் அன்பரசனுக்கு மேலும் 42 ஆண்டுகள் சிறை தண்டனையும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஏற்கனவே 2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் ஒன்றரை லட்சம் இழப்பீடு வழங்கவும் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இதனால் 42+7 என ஆசிரியர் அன்பரசன் 49 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க போகிறார். அதேபோல நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் ஞானசேகரன் 7+1 என 9 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஏ.ஆர்.ரஹ்மானுக்காக சிறப்பு வீடியோவை வெளியிட்ட 'பத்து தல' டீம்!

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'பத்து தல' திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைக்க இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது என்பதும் நேற்று வெளியான 'பத்து தல'படத்தின்

வரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு?

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி என்பதும் அவருக்கு டைட்டில் வின்னர் பரிசாக ரூ.50 லட்சம் கிடைத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

மாற்றுத்திறனாளி ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்த நடிகை: வீடியோ வைரல்!

பெரியதிரை நடிகர் நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் குவிந்து உள்ளனர் என்பது தெரிந்ததே.

பொங்கல் இனிப்பு சாப்பிட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு… சோகச் சம்பவம்!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இனிப்பு சாப்பிட்ட 2 குழந்தைகள் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொருட்களோடு சேர்த்து 100 பேருக்கு கொரோனாவை விற்று சென்ற சேல்ஸ் மேன்!  பரபரப்பு சம்பவம்!

கொரோனா வைரஸின் ஆரம்ப இடமான சீனாவில் பல மாதங்களைக் கடந்து மீண்டும் சில நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.