close
Choose your channels

அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம்: தமிழ் ஹீரோ சிக்கியதால் பரபரப்பு

Tuesday, July 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடத்தியதை அடுத்து தமிழ் திரைப்பட ஹீரோ ஷாம் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் ஷாம் தனது வீட்டில் சூதாட்டம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த சூதாட்டத்தில் நடிகர் நடிகர்கள் தொழிலதிபர்கள் மற்றும் தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது

இதன் அடிப்படையில் காவல் துறை தனிப்படை அமைத்து அதிரடியாக ஷாம் வீட்டை சோதனை செய்தது. இந்த சோதனையில் ஷாம் உள்பட 14 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் இந்த சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணப் புழக்கம் நடைபெற்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து அனைவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கைது செய்தனர். இதன் பின்னர் கைதான 14 பேரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது . தமிழ் ஹீரோ ஒருவர் சூதாட்டம் நடத்தியதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.