சென்னையில் ஷாருக்கானின் 'ஜவான்' படப்பிடிப்பு: ஷாருக்கானுடன் இணையும் பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தை அட்லீ இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ‘ஜவான்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ஷாருக்கான் உள்பட படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர். இதுகுறித்து புகைப்படங்கள் இணையதளங்களில் வருகின்றன.

ஷாருக்கான் மற்றும் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் தந்தை - மகன் ஆகிய கேரக்டரில் நடித்து வருவதாகவும், தந்தை கேரக்டருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மகன் ஷாருக்கான் கேரக்டருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கணவர் விக்னேஷ் சிவனுடன் தேனிலவு சென்றிருக்கும் நயன்தாரா விரைவில் சென்னை திரும்பி ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.