சொந்த வீட்டை காலி செய்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் வீட்டுக்கு வாடகைக்கு செல்லும் ஷாருக்கான்.. என்ன காரணம்?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் தற்போது வசித்து வரும் வீட்டை காலி செய்துவிட்டு, நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் அவரது கணவருக்கு சொந்தமான வீட்டிற்கு வாடகைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பழங்கால பங்களாவில் தான் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். நூறு ஆண்டுகள் பழமையான இந்த பங்களா, மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். தற்போது, இந்த பங்களா புதுப்பிக்கப்பட உள்ளதாகவும், கூடுதலாக இரண்டு மாடிகள் கட்டப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக, மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஷாருக்கான் தனது வீட்டை காலி செய்துவிட்டு, அதே பாந்த்ரா பகுதியில் உள்ள இரண்டு மாடிகளை கொண்ட இரு வீடுகளை வாடகைக்கு எடுத்திருக்கிறார். இந்த வீடுகள், நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் குடும்பத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் வசிக்கும் மன்னர் பங்களாவை முழுமையாக புதுப்பிக்க இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த இரண்டு ஆண்டுகள் முழுவதும் அவர் வாடகை வீட்டில் வசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த வீட்டை அவர் வாடகைக்கு எடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஷாருக்கான் வாடகைக்கு எடுத்திருக்கும் வீட்டின் முன் பணமாக மட்டும் சுமார் 33 லட்சம் செலுத்தியுள்ளதாகவும், இரண்டு வீடுகளுக்காக மாதம் சுமார் 24 லட்சம் வாடகை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments