close
Choose your channels

இவள் உருவில் இறந்த என் தங்கையை பார்க்கிறேன்: 'குக் வித் கோமாளி' ஷகிலா நெகிழ்ச்சி

Sunday, June 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளி ஒருவரை சுட்டிக்காட்டி இவளுக்காக தான் நான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன் என்றும் இவள் இறந்த என் தங்கையை போல் இருக்கிறார் என்றும் ஷகிலா கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியாக்கியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சிகளில் மிகவும் புகழ் பெற்றது என்பதும் டிஆர்பியில் நம்பர்-1 ஆக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே முதல் 2 சீசன் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தற்போது 3வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குக்குகள், சீசன் 3 குக்குகளோடு கலந்து சமையல் செய்யும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த வகையில் சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற கனி, 2வது இடம் பெற்ற ஷகிலா மற்றும் பவித்ரா, ரித்விகா, தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது ஷகிலா பேசியபோது’ சீசன் 3 நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் சீத்தலுக்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன். எனது தங்கை பெயரும் சீத்தல் தான் என்றும், அவள் 23 வயதில் இறந்துவிட்டாள்’ என்றும் கூறினார். மேலும் தனது தங்கை சீத்தல் ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்றும், விஜய்யுடன் ’ஓ பியாரி பானி பூரி பம்பாய் காரி’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்றும் அவர் கூறினார்.

கோமாளி சீத்தல் உருவில் இறந்துபோன என் தங்கையை பார்க்கின்றேன் என்று ஷகிலா கூறியது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் நெகிழ்ச்சிப்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.